நேற்றுவரை முடிவு செய்ய இயலாமல் படுக்கைக்கு சென்ற நான் வயோதிகத்தின் ஆரம்ப காலக் கட்டத்தில் இருபதால் விடியும் முன்னே எழுந்து விட்டேன். சரி ஒரு எட்டு போய்ட்டு வந்திடுவோம் என்று முடிவு செய்து விட்டு ராம்நாட் கிளம்பினேன். கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்றால் 138 கி.மி. என்பதை கூகுள் மேப்பின் மூலம் அறிந்து கொண்டு தன்னந்தனியே எனது மகிழுந்தில் பயணம் செய்தேன்.
பிற்காலத்தில் எனது சரிதத்தை எழுத விரும்புவோர் எனது வண்டிகள் குறித்து விவரம் சேகரித்தாலே பல சுவையான திரைக்கதைகள் கிடைக்கக் கூடும். போகும் வழியில் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பெற்ற பரதவக் குடியிருப்புகள் நிழலாட மிகவும் பெரு விருப்புடன் சாலையின் இருமருங்கிலும் பார்த்துக் கோண்டே சென்றதில் காமராசர் காலத்தில் அவர் செய்த காலப்பிழையை நினைத்து நொந்த உள்ளத்தோடு கடந்தேன்.ஆம். அவர் தமிழக மக்களுக்கு பயன் பட்ட்டும் என்று விமானத்தின் மூலம் தூவிய முள்ளிச் செடிகள் அந்நிலத்தைப் பாழ்படுத்தியுள்ளது மன்னிக்கமுடியாத குற்றம். நெய்தலுக்குரிய கருப்பொருள்களின்றி பாலை நிலப் பின்னணியாகத் தோற்றமளித்தது பரிதபத்துக்குரியது.
சேதுபாவா சத்திரம், கட்டுமாவடி, மீமிசல். தொண்டி, புதுப்பட்டினம் வழியாக ராமநாதபுரம் சென்றேன். அந்த ஊருக்குள் நுழைந்தவுடனே வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் சந்திப்பு மனதுக்குள் வந்து போனது.போன் பேசிக் கொண்டே தனது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டு இருந்த டிராபிக் போலிசிடம் மண்டபத்திற்குரிய வழியினைக் கேட்டுக் கொண்டு சென்றடைந்தேன்.
நண்பரின் புன்னகையினையும் பரபரப்பினையும் இரசித்தவாறு உள்ளே சென்ற எனக்கு காலை உணவு அழைப்பு வந்தது. வந்த கடமை சரிவரச் செய்ய வேண்டுமென்ற கவலையோடு உடனே சென்றேன். வந்து அமர்ந்து எனக்கு பரிச்சியமான் முகங்களை நோக்கினேன். ஒருவரும் இல்லை. நண்பர் பள்ளி ஆசிரியர் சங்கத்தில் திவீர உறுப்பினர்.(திவீரம் என்றால் எதேனும் ஒரு பதவியில் தொடர்ந்து இருப்பது) ஆதலின் மிகுந்த ஆசிரியர் கூட்டம். காதணி முடிந்த மறு விநாடி மைக் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு ஆசிரியச் சங்கப் பிரதிநிதிகள் பேச ஆரம்பித்தனர். வழக்கம் போல மொய்பெய்துவிட்டு வெளீயே வந்து ஊர் திரும்ப ஆரம்பித்தேன்.
வரும் வழியில் மணமேல்குடி காவல்நிலையப் பலகை பார்த்து அதிர்ச்சி. பெயர்ப் பலகையினை அவ்வூரில் உள்ள பிரபல நகைக்கடை ஸ்பான்சர் செய்து இருந்தது. நகைகடைகாரர் தவறு செய்தால் யாரிடம் புகார் அளிப்பார்கள் தெரியவில்லை. இன்றைய அரசு அதிகாரிகளுக்கு அரசு விதிகளை ஒரு பாடமாக வைத்து பயற்சி அளிக்க வேண்டும் என்று வாத்தியார் புத்தி சொன்னது.மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு நுழைந்தேன் அத்தனையும் மறந்து எழுந்தேன். உறக்கத்தில் அத்தனையும் காணாமல் போனது நாளைய கல்லூரிச் ச்ந்தனையில்...............
பிற்காலத்தில் எனது சரிதத்தை எழுத விரும்புவோர் எனது வண்டிகள் குறித்து விவரம் சேகரித்தாலே பல சுவையான திரைக்கதைகள் கிடைக்கக் கூடும். போகும் வழியில் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பெற்ற பரதவக் குடியிருப்புகள் நிழலாட மிகவும் பெரு விருப்புடன் சாலையின் இருமருங்கிலும் பார்த்துக் கோண்டே சென்றதில் காமராசர் காலத்தில் அவர் செய்த காலப்பிழையை நினைத்து நொந்த உள்ளத்தோடு கடந்தேன்.ஆம். அவர் தமிழக மக்களுக்கு பயன் பட்ட்டும் என்று விமானத்தின் மூலம் தூவிய முள்ளிச் செடிகள் அந்நிலத்தைப் பாழ்படுத்தியுள்ளது மன்னிக்கமுடியாத குற்றம். நெய்தலுக்குரிய கருப்பொருள்களின்றி பாலை நிலப் பின்னணியாகத் தோற்றமளித்தது பரிதபத்துக்குரியது.
சேதுபாவா சத்திரம், கட்டுமாவடி, மீமிசல். தொண்டி, புதுப்பட்டினம் வழியாக ராமநாதபுரம் சென்றேன். அந்த ஊருக்குள் நுழைந்தவுடனே வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் சந்திப்பு மனதுக்குள் வந்து போனது.போன் பேசிக் கொண்டே தனது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டு இருந்த டிராபிக் போலிசிடம் மண்டபத்திற்குரிய வழியினைக் கேட்டுக் கொண்டு சென்றடைந்தேன்.
நண்பரின் புன்னகையினையும் பரபரப்பினையும் இரசித்தவாறு உள்ளே சென்ற எனக்கு காலை உணவு அழைப்பு வந்தது. வந்த கடமை சரிவரச் செய்ய வேண்டுமென்ற கவலையோடு உடனே சென்றேன். வந்து அமர்ந்து எனக்கு பரிச்சியமான் முகங்களை நோக்கினேன். ஒருவரும் இல்லை. நண்பர் பள்ளி ஆசிரியர் சங்கத்தில் திவீர உறுப்பினர்.(திவீரம் என்றால் எதேனும் ஒரு பதவியில் தொடர்ந்து இருப்பது) ஆதலின் மிகுந்த ஆசிரியர் கூட்டம். காதணி முடிந்த மறு விநாடி மைக் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு ஆசிரியச் சங்கப் பிரதிநிதிகள் பேச ஆரம்பித்தனர். வழக்கம் போல மொய்பெய்துவிட்டு வெளீயே வந்து ஊர் திரும்ப ஆரம்பித்தேன்.
வரும் வழியில் மணமேல்குடி காவல்நிலையப் பலகை பார்த்து அதிர்ச்சி. பெயர்ப் பலகையினை அவ்வூரில் உள்ள பிரபல நகைக்கடை ஸ்பான்சர் செய்து இருந்தது. நகைகடைகாரர் தவறு செய்தால் யாரிடம் புகார் அளிப்பார்கள் தெரியவில்லை. இன்றைய அரசு அதிகாரிகளுக்கு அரசு விதிகளை ஒரு பாடமாக வைத்து பயற்சி அளிக்க வேண்டும் என்று வாத்தியார் புத்தி சொன்னது.மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு நுழைந்தேன் அத்தனையும் மறந்து எழுந்தேன். உறக்கத்தில் அத்தனையும் காணாமல் போனது நாளைய கல்லூரிச் ச்ந்தனையில்...............
Comments